| July 23 Issue |
| |
மூழ்கியவனைக் காப்பாற்றிய சத்தியம்
பூமி முக்கால் பாகம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் மனிதனுக்குத் தண்ணீரைக் கண்டால் ஓர் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. தண்ணீரில் கண்டம் எனச் சோதிடர் சிலர் அச்சுறுத்தி விடுவதால் பலர், கிணறு, குளம், குட்டை, ஏரி, கடல் என எந்தத் தண்ணீரிலும் கால் வைப்பதில்லை. கொஞ்சம் தொட்டு, தலையில் தெளித்துக்கொள்வதோடு சரி.
|
| |
இறைவனே நீ எங்கோ ஓடிவிடு
குழந்தைக்கு சத்துணவு சமைக்கும் கூடமே குழந்தைகளை சமைக்கும் கூடமாய் ஆனதே இரும்பு உள்ளங்களும் உருகிடும் வண்ணம் நெருப்பு அவர்தம் நெஞ்சில் எறியதே படிப்பில் மதிப்பெண் தொண்ணூறு என்றால் மனதில் மகிழ்ச்சி பொங்குமே நெருப்பில் குழந்தைகள் தொண்ணூறு என்றால் ஐயகோ கொடுமையை என் சொல்வேன்?
|
| |
உழவர் கண்ணீர்
பாரத சமுதாயமே ! என்னைப் பார் நீரின்றி நிலம் வாட நானும் வாடுகிறேன் ! விளைகின்ற நிலம் கலைகின்ற நிலமானது ! பசுமைப் புரட்சி கண்ட பூமியே வறட்சி கண்டது ஏன்?
|
| |
உள்ளங்கையில் உலகம்
ஒவ்வொரு சாதாரண குடிமகனும் வருடத்தின் கடைசியில் புதிய காலண்டர்களைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது நாம் அறிந்த ஒன்றே. பல்வேறு வண்ணங்களிலும் குறிப்பாக மிளிரும் வெள்ளைத் தாளில் அச்சடிக்கப்பட்ட வண்ணத்திலான நாள்-மாதம் விவரங்கள் காட்டியை விரும்பாதோர் எவருமில்லையென்றே கூற இயலும்.
|
| |
இயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங்
இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.
|
| |
மாறி வரும் காலச் சூழலில் மத்திய ரிசர்வ் காவல் படை
மாறும் காலச் சூழலுக்கு ஏற்ப, தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது மத்திய ரிசர்வ் காவல் படையாகும். தீவிரவாதத்தை வேரறுக்கும் சவாலின் பெரும்பகுதியை சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை ஏற்றுக் கொண்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் பணியை எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐந்து பட்டாலியன்களிடமிருந்து சிஆர்பிஎப் அண்மையில் பெற்றது.
|
| |
வாருங்கள், சுயதொழில் கற்போம்
படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவிப்பதற்காக துவங்கப்பட்ட ஒருதுறை, இன்று நன்கு படித்த இளைஞர்களும் பல்வேறு தொழில்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமுடன் நாடும் ஒரு பயிலகமாக பரிணமித்துள்ளது. இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது மதுரையில்தான். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோர் தொடர்கல்வி விரிவுபணித்துறை படிக்காத, படித்த இளைஞர்கள் மட்டுமல்ல நடுத்தர வயதினரும்கூட தமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ள வழிகாட்டுகிறது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுத்தருகிறது.
|
| |
செய்திக் குறிப்பு:
"நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம்" குறித்து விரிவாக விவாதிக்கும்а
இந்த ஆண்டின் தமிழ் இணைய மாநாடு டிசம்பர் மாதம் 11,12 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனை தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.முத்து நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
|
| |
இந்த மௌனம்
குரல் கேட்கவும் குரல் கொடுக்கவும் விருப்பம் இல்லா இந்த மௌனம்
|
|
>>More Headlines
|