|
• செல்பேசிகள்
வழியாக ரெயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
• மும்பைக்குப்
போ (கோ மும்பை) அட்டைகள், பேருந்து நிலையங்களில் விற்கப்படும்.
• ஷதாப்தி விரைவு
வண்டி பராமரிப்பு, வெளிப் பணி ஒப்படைப்பு செய்யப்படும்.
• 30 ரெயில்
நிலையங்களில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் உருவாக்கப்படும்.
• ரயில்வே துறையின்
சொத்துகள் உயர்ந்துள்ளன. ரூ. 49,250 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
• பயணிகள் ரயில்
எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
• சரக்கு ரயில்களில்
ஏற்றப்படும் சரக்கின் அளவு 790 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
• ரூ. 4000 கோடி
செலவில 36000 கோச்களில் கிரீன் டாய்லெட் அமைக்கப்படும்.
• ரயில், ரயில்வே
பிளாட்பார்ம்களைப் பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
• ரூ 500 கோடி
செலவில் நடைமேடைகள் மேம்படுத்தப்படும்.
• 50 ரெயில்
நிலையங்களில் நகரும் மின்படிகள் (எக்ஸ்கலேட்டர்) அமைக்கப்படும்.
• தானியங்கி
டிக்கெட் கவுன்டர்கள் 6000 ஆக உயர்த்தப்படும்.
• அதிவிரைவு
ரெயில்களின் வருகை நேரம், வந்து சேர உள்ள ரெயில் நிலையங்களில் திரையில் காட்டப்படும்.
• எண்ணூர் துறைமுகத்துடன்
ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்படும்.
• காத்திருப்போர்
பட்டியலில் பெயர் இருப்பினும் இ-டிக்கெட் வழங்கப்படும்.
• பயணச் சீட்டு
உறுதியான தகவலைச் செல்பேசி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
• பயணச் சீட்டு
வாங்க, வரிசையில் நிற்கும் முறையை ஒழிக்க இலக்கு நிர்ணயம்.
• ரெயில் நிலையங்களில்
தொடுதிரை கணினிகளும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வைக்கப்படும்.
• ரெயில்வே
நிதி இருப்பு, ரூ.20,480 கோடிகள்.
• பயணச் சீட்டுகள் வழியாகப் பெறப்படும் வருவாய், 14 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
• கட்டணக் குறைப்பு, அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டையும் லாபத்தையும் உயர்த்தியுள்ளது.
• 2009க்குள்ளாக ரெயில்வே கால் சென்டர்களுடன் இணைக்கப்படும்.
• ராஜ்தானி, ஷதாப்தி ரெயில்களில் அதிக வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும்.
• 560 ரெயில் நிலையங்களின் நீளம் அதிகரிக்கப்படும்.
• மூத்த பெண்களுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.
• எயிட்ஸ் நோயாளிகளுக்கு ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதம் சலுகை உண்டு.
• பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு முடியும் வரை இலவச சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
•
12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
• இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பயணச் சீட்டுக் கட்டணம் 5 சதம் குறைப்பு.
• ஏசி 3 டயர் வகுப்பு ரெயில் கட்டணம் 3 சதம் குறைப்பு
• முதல் வகுப்பு ஏசி வசதி கொண்ட பயணச் சீட்டுக்குக் கட்டணம் 7 சதம் குறைப்பு
• இரண்டாம் வகுப்பு ஏசி வசதி கொண்ட பயணச் சீட்டுக்குக் கட்டணம் 4 சதம் குறைப்பு
• பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான சரக்கு கட்டணம் 5 சதம் குறைப்ப
• அசோக சக்கரா விருது பெற்றவர்கள், ராஜ்தானி, ஷதாப்தி ரெயில்களில் இலவசமாகப் பயணிக்கலாம்.
• காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக தில்லி - புனே சிறப்பு ரெயில் விடப்படும்.
• எல்லா முக்கிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்படும்.
• 53 புதிய ரெயில்களும் மேலும் 10 ஏழைகள் (கரிப் ரதம்) ரெயில்களும் விடப்படும்.
• 16,548 பழைய ரெயில் தடங்கள் மாற்றப்படும்.
• கேரளாவில் புதிதாக ரெயில் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
• ரயில் திட்டம் ரூ. 11 ஆயிரம் கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.
• 2009 ஆண்டில் கால்சென்டர்கள் மூலம் முன்பதிவு செய்ய வழி செய்யப்படும்.
• ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
• மின்சார ரயில்கள் அதிகரிக்கப்படும்.
• 48 புதிய கன்டெய்னர் மையங்கள் அமைக்கப்படும்.
• ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
• தானியங்கி சிக்னல் அமைக்கப்படும். விபத்துகளை தவிர்க்க வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும்.
• மும்பை சத்ரபதி ரயில் நிலையம், பாட்னா, டில்லி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
• தானியங்கி கருவிகள் மூலம் இ-டிக்கெட் வழங்கப்படும்.
|
|