|
| |
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்
புத்தத் துறவியான வணக்கத்துக்குரிய அத்துரிலிய இரத்தின தேரர், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்.
|
| |
உலகத் தமிழரின் பண்பாட்டுக் காப்பாளர் இராசாராம்
கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடு சீசெல்சு. அந்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர் அங்கு வாழ்ந்து வருவதற்கான
பதிவுகள் உள. வருகை, பிறப்பு, இறப்பு, திருமணம், வாக்காளர் பட்டியல் என அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழர் பற்றிய பதிவுகள்.
ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டுகிறேன். பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறார் இராசாராம். காரை நான் ஓட்ட, என் பக்கத்தில் அவர் அமர்ந்து
அந்தக் காப்பகத்துக்கு வரும் பொழுதே அவருக்கு வியப்பு.
|
| |
புதிய மொந்தையில் புளித்த கள்
1935இல் இந்திய அரசுச் சட்டத்தைப் பிரித்தானிய அரசு நிறைவேற்றியது. இந்தியத் தேசியவாதிகளுக்கு அந்தச் சட்டம் எட்டிக் காயானது. இந்தியா மீதான மேலாதிக்கத்துக்கு மேலும் வலுவூட்டும் சட்டம் எனக் கூறினர்; ஏற்க மறுத்தனர். தன் மேலாதிக்க நோக்கை நிறைவேற்றவும் நீடிக்கவும் அரசியல் அடிமைகளாக இந்திய மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கவும் இத்தகைய சட்டங்கள் பிரித்தானிய அரசுக்குச் தேவை என இந்தியத் தேசியவாதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
|
| |
சேதுத் திடல்கள்
சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும்.
|
| |
சேதுக் கால்வாய் :வளர்ச்சிக்கு வாய்க்கால்
இலங்கைத் தீவைச் சுற்றிய நெடிய, கால நீட்டமான கப்பல் தடத்துக்கு மாற்றுத் தடம் இந்தியக் கரையோரமாக உள்ளதா என்ற தேடல் கடந்த 200 ஆண்டு வரலாறுடையது. ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப் பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் தந்துவந்த பரிந்துரைகளின் திரண்ட தெளிவே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டம்.
|
| |
18ஆயிரம் பாடல்கள் 12 ஒலிபெயர்ப்புகள்
பர்மியம்
மியான்மாரில் தமிழர் பலர் அந் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து பெற்ற குழந்தைகளுக்குத் தேவார திருவாசகங்களைப் பர்மிய மொழியில் எழுதிச் சொல்லிக் கொடுக்கின்றனர். திருக்குறள் போன்ற அரிய நூல்களையும் பர்மிய மொழியில் பயில்வோர் பலர் உளர். பர்மியத்தில் 18,246 பாடல்களையும் படிக்கலாம். ஒன்றான மாசில் வீணையும் எனத் தொடங்குவதை அவ்வரிவடிவத்தில் காண்க.
|
| |
18ஆயிரம் பா&
முதலமைச்சராக இருந்து, அரசியலில் ஆழ்ந்து நிறைந்தவர்,
தமிழகத்தின் செழுமையை அறிந்தவர்,
தென்திசையின் பெருமையைப் போற்றியவர்,
தமிழ் மொழிக் கடலுள் மூழ்கி எழுந்தவர்,
பிறமொழி வெறுப்பாளரல்லர்,
ஆனால் தமிழ் மொழியே வேறு எந்த மொழியையும் விடச் சிறந்த வழக்கை உடையது எனத் தீவிரமாக நம்பியவர்,
தமிழ் மொழி வழக்குகள் ஏனைய வழக்குகளுக்கு வழிகாட்டும் எனவும்,
தமிழை முன்னெடுத்துச் செல்க; மனித சமுதாயம் மெய்யறிவு பெற்று முன்னேறும் எனவும் எழுதி வைத்தவர்,
அவர், 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த செந்தமிழர், சேக்கிழார் எனப் பெயரினர்.
|
| |
யாழ்ப்பாணத்துக்குத் தன்னார்வலர் தரும் உணவும் மருந்தும்
தமிழ்ப் பாண்பாட்டில் ஊறிய தமிழ்ப் பெண்களைத் தமிழ்நாடு முழுவதும் தேடியும் கிறடக்கவில்லை எனில் யாழ்ப்பாணம் போய்த் தேடவேண்டியதுதான்; இந்தக் கருத்தமைந்த வரிகள் அண்மையில் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படத்தில் வருகின்றன. வேறொரு திரைப்படச் சுவரொட்டி விளம்பரம் ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல் இராமேஸ்வரம் என்ற வரிகள் வந்துள.
|
| |
இந்தியாவின் உயிர்மையைத் தேடி
இந்தியத் தேசம் சிலிர்க்கிறது, ஆர்ப்பரிக்கிறது, தோள் கொட்டுகிறது. ஐவகை நிலத்தின் பரப்பு அகன்று நீண்டு விரிகிறது. வானளாவ உயர்ந்த இமய மலைகளின் முடிமீது பனிப்பாளங்கள் குவிந்து மின்னுகின்றன. கிழக்கிலும் மேற்கிலும் நீண்ட கரையோரமெங்கும் நீலத் திரைகடல் ஓயாது ஒலியெழுப்பி அமைமோதிக்கொண்டிருக்கிறது.
|
| |
ஒன்றுபட்ட இலங்கையைத் தகர்த்தெறியும் சிங்களவர்
அமைச்சர் திசா விதாரணரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.) பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச கோரியுள்ளார். அவ்வாறு அவரை நீக்காவிட்டல் சிங்களவரிடையே சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வலுத்துவிடும் எனவும் விமல் வீரவன்ச அச்சுறுத்தியுள்ளார்.
|
|
>>More Headlines
|