| Amudhasurabi |
| |
நீங்கள் சேமிக்கிறீர்களா?
சென்னை, ஆவடி, தூய இருதய மரியாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்புப் பயில்பவர், வெ. ஜனனி. மாணவ நிருபராகப் பயில விரும்பினார். அவரிடம் அவர் பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களின் சேமிப்புச் சிந்தனைகளை அறிந்து வருமாறு பணித்தோம். அவருடைய கன்னி முயற்சி இது.
|
| |
வெற்றித் திருமகள் - சானியா மிர்சா
"செரீனா வில்லியம்சுடன் நீங்கள் ஆடிய அற்புதமான ஆட்டத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்கள் திறமையைப் பார்த்து வியந்து, பரவசம் அடைந்த கோடிக்கணக்கான இந்தியருள் நானும் ஒருவன்! நீங்கள் மேலும் பல வெற்றிகள் பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்"
|
| |
நேரடி வெளிநாட்டு முதலீடு (குனுஐ) நல்லதா? தீயத
உலகிலேயே ஜனத்தொகை அதிகமான நாடுகள் என்று வெட்கப்பட்டுக்கொண்டிருந்தவை இந்தியாவும் சீனாவும்தாம். ஆட்டுமந்தைகள் போல ஏளனமாகத் தோன்றிய இவர்கள், திடீரென "மனித வளம்' என்று உணரப்பட்டது சென்ற இருபது ஆண்டுகளில்தாம். இவர்கள் மூளையும் உழைப்புத் திறனும் மிக்கவர்கள் என்பது, உலகம் "அறிவுச் சமுதாய'மாக மாறத் தொடங்கியபோது புரிந்தது.
|
| |
வரிகள், கறுப்புப் பணம், வரி ஏய்ப்பு
இந்திய அரசு, சரியான முறையில் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் வருமானத்தைப் பெருக்கவும் செய்யவேண்டிய காரியங்களில் முக்கியமானது - எல்லா மறைமுக வரிகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு மதிப்புக் கூடுதல் வரியை மட்டும் கொண்டுவருவது. முதல் சில ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தாலும் நாளடைவில் இதுதான் அனைவருக்கும் வசதியானது, அரசின் வருமானத்தையும் அதிகரிப்பது. இதைப் போன்றே நேரடி வரிகளான வருமான வரி, கார்பொரேட் வரி ஆகிய இரண்டையும் எளிதாக்கி, நாட்டு மக்கள் அனைவரையும் வரி கட்ட வைக்க முயற்சி செய்யவேண்டும்
|
| |
கவிதை வெளி
மண்ணில் கண்ணைத் தூவித் தேடினேன் எதிர்காலத்தை. கண்ணைக் கூசும் அளவிற்கு ஒளிமயமாய்க் கிடந்தது
|
| |
வயது
தான் சட்டெனக் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருந்து கழன்றுகொண்ட வயது அது. வாங்கும் ஒவ்வொரு உடையும் ஒருவித கௌரவத்தை அளிக்கவேண்டும் என்ற கவனம் ஏற்பட்ட வயது அது. ஒரு மாதிரியான அழுக்கு வண்ண, மங்கல் வண்ண உடைகள் அலமாரியில் சேரத் தொடங்கியது அப்போது தான். பருத்தி உடைகள் மேல் ஆசை ஏற்பட்டதும் அப்போதுதான். நடையில் துள்ளல் அடங்கி, குதிக்கால் உயர செருப்புகள் வேண்டாம் எனத் தோன்றத் தொடங்கியதும் அப்போதுதான். தனக்கு வயதாகிவிட்டது என்ற பயம் வந்ததும் அப்போதுதான்.
|
| |
கவிஞரேறுவின் கதை
நாச்சாரம்மாவின் ஒன்றுவிட்ட மாமன் மகன்தான், கவிஞரேறு துரைசாமி. நாச்சாரம்மா வயசுக்கு வந்தபொழுது "பொழுதுடன் புலர்ந்த கமலமே! கானகத்தில் மலர்ந்த கலாபமே!' என்று தொடங்கும் ஒரு கவிதையை எழுதிக்கொண்டுபோய்க் கொடுத்தார், அவர். வாங்கிப் பார்த்ததும் நாச்சாரம்மாவிற்குப் பேராச்சரியமாகிவிட்டது. துரைசாமியத்தானுக்கு தமிழல்லாத பிறமொழிகளெல்லாம் தெரியுமா என்னுமளவுக்கு எழுத்துக் கூட்டி அதைப் படித்துப் படித்து மாய்ந்து போனாள். கடைசியில் தமிழாசிரியர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கும் சின்னக் கருப்பனிடம் காட்டித்தான் அதற்கு அர்த்தம் தெரிந்துகொண்டாள்.
|
| |
முதலீடுகள் எவை சிறந்தவை?
இன்றுள்ள பங்கு நிலவரங்களை வைத்து நாம் முடிவெடுப்பது சரியில்லை. நம்மைப் போன்றவர்களுக்கு இந்தப் பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்குள்ள திறமை இல்லை. குதிரைப் பந்தயத்திற்கும் இந்தப் பங்குச் சந்தை விலையேற்ற இறக்கத்திற்கும் ஒரு வித்தி யாசமும் இல்லை என்று அனுபவமுள்ளவர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஓரளவு பங்குச் சந்தையில் இலாபத்தை நாம் இந்தப் பரஸ்பர நிதிகள் மூலம் பெறலாம் என்பது எனது அனுபவம். இவற்றுள் பல வகைகள் உண்டு. நமக்குத் தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
|
| |
கவிதாயினி லீனா மணிமேகலை
கவிஞர்கள் பலர், பொதுவாக ஒரே முறையில், கருவில் - தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களைப் போல் - படைத்துத் தள்ளுவது கிடையாது. வெவ்வேறு உணர்வுகளை ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுத்துவதில்தான் ஒருவரின் தனித் துவம் புலனாகும். லீனாவின் கவிதைகளில் வன்முறையின் தாக்கம் மட்டும் இருப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. பாலியல் உணர்வுகளையும் இவர், மிகவும் நளினமாகச் சித்திரிக்கிறார்.
|
| |
"நிதி சால சுகமா?'
நிதி சால சுகமா, ராமு நி சந்நிதி சேவ சுகமா' என்று ஒரு சந்தர்ப்பத்தில், தன் மனதையே கேட்டுக்கொள்கிறார் தியாக பிரம்மம். மமதையில் திளைப் பவர்களை நரஸ்துதி செய்வது சுகமா? என்றும் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறார். அந்தச் சந்தர்ப்பம், வறுமையால் தான் வாடும்போது தஞ்சை மகாராஜாவின் அழைப்பு வந்ததென்றும், வறுமையில் ராமனின் சன்னதியில் பாடிக் கிடப்பதா அல்லது செல்வச் செழிப்போடு, ராஜ தர்பாரில் மன்னர் புகழ்பாடிக் கிடப்பதா என்று அவர் தன்னைக் கேட்டுக்கொள்கிறார்.
|
|
>>More Headlines
|