| Amudhasurabi |
| |
கவிதை வெளி
பிறகு,எல்லாவற்றையும் கடந்துவேடர்கள் நுழைய முடியாதவனங்களில் திரியும்பறவையானது காதல்.
|
| |
முடிந்த கதை தொடர்வதில்லை
மனம் கட்டறுத்து ஓடும் கன்றுக் குட்டி யாய்ப் பின்னோக்கி ஓடுகிறது. "நல்ல ஆள் வந்து சேர்ந்தார், நிம்மதியைக் கெடுக்க' என்று அலுத்துக் கொள்கிறாள். மேல் உத்தரத்தையே அவள் கண்கள் வெறிக்க, மனம் பழைய காட்சிகளைத் திரைப்படமாகப் போட்டுக் காண்பிக்கிறது. நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
|
| |
கவிதாயினி தேன்மொழி
ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.
|
| |
அறுபத்து நான்கு கட்டங்கள்
சதுரங்கத்தின் மீதான அதீத ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் போதும்! ஓர் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால், இது வரை சதுரங்கம் மீதாக வெளியாகியுள்ள புத்தகங்களைக் கணக்கிட்டால் அது மற்ற எல்லாத் துறைகளில் உள்ளதை விட அதிகமாகவே இருக்கும். எதற்கு இவ்வளவு புத்தகங்கள்? அறுபத்து நான்கு கட்டங்களில் அப்படி என்னதான் இருக்க முடியும்?
|
| |
தமிழர் விளையாட்டுகள்
சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும்.
|
| |
வெற்றித் திருமகள் : ராணி முரளிதரன்
எனது ஆர்வத்துக்கு நான் பிறந்த ஊரையும் நான் வளர்ந்த சூழ்நிலையையும்தான் முக்கியமான காரணமாகச் சொல்ல வேண்டும். இயற்கைச் சூழ்நிலை நிறைந்த கேரளாவில் திருவனந்த புரத்துக்கு அருகில் உள்ள பிரப் பன்கோடு என்ற கிராமத்தில் தான் நான் பிறந்தேன். எனது வீட்டுக்கு அருகிலேயே ஒரு அழகான கிருஷ்ணன் கோயிலும் அதனையொட்டி ஒரு குளமும் உண்டு. சிறுவயதிலிருந்தே சிறுவர் சிறுமிகள் எல்லோரும் நீச்சல் பழகுவோம். எட்டு வயதிலேயே எனக்கு நீச்சலில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
|
| |
சுவாமி விவேகானந்தர் வித்தியாசமான ஆன்மீகவாதி
நரேனும் தன் வயதை மீறிய ஆன்மீகத் தேட்டையில் ஈடுபட்டிருந்தவன். தன்னிடம் வாத்சல்யம் காட்டும் அந்தக் 'கிழட்டுப் பிராமணனிடம்' மற்றவர்கள் போல் அவனுக்கு பக்தி உணர்வு ஒன்றும் பீரிட்டுவிடவில்லை. அவருடைய பாசமும் பேச்சும் அவனுக்குத் திகைப்பூட்டின. ஆனால் இந்தச் சிறுவன்தான் தன் சீடனாகப் பெரிய காரியங்களைச் சித்திக்கும் வல்லவன் என்று அந்த பூசாரிப் பிராமணனுக்குத் தெரிகிறது.
|
| |
நூல் நயம்
தமிழ் மொழியில் பல்வேறு மொழிகளைச் சார்ந்த சொற்கள் நிறையக் கலந்து, வழக்கில் நிலைபெற்றிடும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இவ்வாறான சொற்களில் - பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்கள் - சுமார் ஐயாயிரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு நேரான அழகு தமிழ்ச் சொற்களை ஆசிரியர் இந்நூலில் பட்டியல் இட்டுள்ளார்.
|
| |
சத்துணவு எது ஏன்?
இன்று பதப்படுத்தப்பட்ட (தங்ஹக்ஹ்) உணவுப் பண்டங்களை வாங்குகிறோம். இது அவசரத் தேவைக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் கூட அவற்றைக் கெட்டுப் போகாமல் தடுக்கச் சில ரசாயனப் பொருள்களைச் சேர்ப்பதனால் அவை தீங்கு விளை விக்க இயலும். ஆனால் எல்லாப் பொருள்களும் அவ்வாறு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று சொல்லமுடியாது. ரசாயனக் கலவை அல்லாத உணவுப் பொருள்கள் உண்டு.
|
| |
சுமை : வாமன கதை
அவன் வரும் திசை பார்த்து தினமும் நிற்கிறாள். தாமதமாகப் பேருந்து வராதா என்று இருக்கிறது. வீண் வீம்பால் எதையோ இழந்து விட்டதான மன சஞ்சலம். நெஞ்சின் மீது சுமையைப் பாரமாக ஏற்றி வைத்துவிட்டு ஒருவன் காணாமல் போவானோ? வேதனை, வெறுமை.
|
|
>>More Headlines
|