|
| |
பாரதியின் தத்துவ முன்னோடி ஆவுடையக்காள்!'-முப்பால்மணி
கோவை பீளமேட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட முனைவர் முப்பால்மணி ஓர் ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். கல்லூரி மாணவர்களின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்து விட்ட சிறந்ததொரு ஆளுமையைப் பெற்றவர். தத்துவம் சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர். ஆழமும், நுட்பமும் கொண்ட இவரது எழுத்துக்கள் அரிதில் அகப்படும் உயிர்காக்கும் மூலிகை போல தமிழ் வளத்திற்கு உரம் சேர்ப்பவை. பொதுவுடைமை சார்ந்த கருத்தாளர். பல அரிய வகை பழந்தமிழ் நூல்களைத் தேடிப்பிடித்து சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர். சமீபத்தில் பெ.சு.மணியின், 'வெ.சாமிநாதசர்மா' விருதினைப் பெற்றுள்ளார் இவர். விருதுபெற்ற தருணத்தை ஒட்டி இவரைச் சந்தித்தோம்....
|
| |
இசையும் நாட்டியமும்
இசையும் நாட்டியமும் தமிழ்மொழியின் இரு கண்கள். தேவார, திருவாசகப் பாடல்கள் பண்ணோடு ஆலயங்களில் பாடப்படுகின்றன. மகாகவி தாம் எழுதிய பல பாடல்களுக்கு ராகம், ஸ்வரக் குறிப்பு போன்றவற்றையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இசைபட வாழ்ந்தவர் மட்டுமல்ல. இசையில் தோய்ந்தவரும் கூட. பாரதி பிறந்த டிசம்பர் மாதத்தில் நாம் அவர் உணர்வோடு ஊறிய இசை பற்றியும் நினைத்துப் பார்ப்பது நல்லது.
|
| |
"எனது இரண்டாம் காதலி அனிதா!'..புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியிடம் ஒருநேர்
எங்கோ தஞ்சையின் மூலையில் இருக்கும் 'புஷ்பவனம்' என்ற கிராமத்தை இசைத்துறையில் பிரபலமாக்கி உலகெங்கிலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, கேட்பவர்களையும் உடன் பாடவைத்து சாதனை படைத்திருப்பவர் புஷ்பவனம் குப்புசாமி. அவருக்கு இல்லத் துணையாக மட்டும் இல்லாமல் மேடைகளிலும் உடன்பாடி அவருக்குப் பாட்டுத்துணையாக விளங்குகிறார் அனிதா குப்புசாமி! அடிப்படையில் பி.எஸ்.ஸி. கணிதம் பயின்றவர் புஷ்பவனம். பின் இசைமீது இருந்த காதலால் பி.ஏ., சங்கீதமும் அடுத்து எம்.ஏ. சங்கீதமும் பயின்றார்.
|
| |
நவம்பர் இதழ்:ஒரு கண்ணோட்டம்
நவம்பர் அமுதசுரபியின் அட்டைப்படம் மிகவும் கவர்ந்தது. கருணை ததும்பும் விழிகளும் ஆசீர்வாத மளிக்கும் கரங்களும் கொண்ட சாயியின் அட்டைப்படம் ஓவியர் மணியம்செல்வன் அவர்களின் மற்றொரு மைல்கல். எழுத்தாளர் பூரம் நேர்காணல், அவரின் பன்முகப் போக்குகளைப் பாங்குடன் உணர்த்தியது. சிறுகதை குறித்து இப்பெரியவரின் வேதனை பலராலும் தற்போது தெரிவிக்கப்படும் ஒரு கருத்தாக உள்ளது. பாலுசத்யா எழுதிய பாம்புகள் கதையின் முக்கியத் திருப்பம் தரும் கடைசிச் சொற்றொடர் என்னை மிகவும் கவர்ந்தது.
|
| |
மருத்துவம்: குழந்தைகளுக்குக் கைவைத்தியம் செய்வது சரிதானா?
வளரும் குழந்தைகளிடையே மனரீதியான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருப்பது உண்மை. அதிக அளவு, அதிக நேரம் அவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. போட்டிகளும் அதிகம். அதுமட்டுமல்ல பெற்றோரின் ஆசை குழந்தைகள்மேல் திணிக்கப்படுகிறது. படிப்பில் தன் பிள்ளை முதலாவதாக வரவேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். பள்ளிகளில் சரியாகப் படிக்க முடியாத பிள்ளைகள், பின் நாளில் பெரிய அறிஞர் ஆனதை நாம் பார்த்துள்ளோம்.
|
| |
அஞ்சலி..."கிரிக்கெட் நட்சத்திரம்!" (மறைந்த கிரிக்கெட்வீரத் பி.ஆர். உம்ரிகர் 28.03.
1962-மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரில், "ஆகா, என்ன அற்புதமான ஆட்டம்!... நல்ல ஃபார்மில் இருக்கிறார் மனுஷன்!" என்று அனைவரும் புகழ்ந்து கொண்டிருந்தபோது, அத்தொடரின் முடிவில், முற்றிலும் எதிர்பாராத வகையில் 'டெஸ்ட்' கிரிக்கெட்டிலிருந்து' ஓய்வு பெற்றுவிட்டார் பாலி உம்ரிகர்!
|
| |
தற்கால இலக்கியம்...நா.பா. பிறந்த நாள்:டிசம்பர் 18,1932. நினைவு நாள்:டிசம்பர்
'பண்டித வித்வான் ஒருவர் பத்திரிகை உலகில் படைப்பிலக்கியத் துறையில்-அனைவரும் வியந்து பாராட்டும் ஆளுமையுடன் திகழ முடியுமா?' என்கிற கேள்விக்கு, நா. பார்த்தசாரதியை மட்டுமே சான்று சொல்ல முடியும்!
|
| |
பதிவுகள்....எழுத்துச் சித்தர் வல்லிக்கண்ணன்
20ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே இலக்கியப் பாலமாக எழுத்துச் சித்தராக வாழ்ந்து தம் படைப்புகளாலும் நினைவுகளாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற வல்லிக்கண்ணன் படத் திறப்பு, புகழஞ்சலிக் கூட்டம் நவம்பர் இருபதில் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயல் இசை நாடக மன்ற அரங் கத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
|
| |
எனது குறிப்பேடு: ஆசிரியர் பக்கங்கள்..அமரர் பி.வி.ஆர்...சில நினைவுகள்...
முதுபெரும் எழுத்தாளர் பி.வி.ஆர். (பி.வி.ராம கிருஷ்ணன்) தம் 79ம் வயதில் காலமானார் என்ற செய்தி நெஞ்சைப் பல நினைவுகளில் ஆழ்த்தியது. அவர் ஒரே நேரத்தில் ஆறு பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்த காலம் இருந்தது. ஒரு சரியான ஒழுங்கிற்கு ஆட்படாதிருந்தால் இந்த இமாலய சாதனை சாத்தியமல்ல.
|
| |
தேவை : புதியதொரு கூட்டணி
ஒரு தலைப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டால், நிச்சயம் பெரும்பாலான பிரதிகளுக்கு நூலக ஆர்டர் கிடைத்துவிடும். (ஒரு பதிப்பில் 1000 அல்லது 1200 பிரதிகள் அச்சிடுவது வழக்கம்.) போட்ட முதலுக்கு ஓரளவு லாபம் பார்த்து விடலம். மீதி பிரதிகள், ஒரு ஆண்டுக்குள் விற்று விட்டால், லாபம் கணிசமாக இருக்கும் என்று கணக்குப் போட்டு தமிழில் புத்தகங்கள் வெளியிட்டது ஒரு கால கட்டம். ஜோதிடம், வாஸ்து, சமையல் புத்தகங்களுக்கு இந்த விதி பொருந்தாது; அவைகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு என்று சொல்லி அத்தகைய புத்தகங்களில் முதலீடு செய்யும் பதிப்பகங்கள் பல உண்டு.
|
|
>>More Headlines
|